
சுயமாய் சிந்திக்க
தடுமாறும் சிறுசு,
ஆங்கில மோகத்தால்
அடிமாடான பெருசு.
சிறுவர்கள் கையிலும்
செல்போன் சிணுங்க,
தாத்தா பாட்டிகள்
முதியோர் இல்லத்தில் ஒதுங்க.
குடும்ப பாசத்தை
கொலைசெய்யும் சீரியல்,
கண்கூசாமல் பார்த்தனர்
இனிய இல்லத்தரசிகள்.
டாஸ்மார்கில் தஞ்சமடைந்த
தமிழ்நாட்டு குடிமகன்களால்,
நாடு செழித்தது
மானியங்கள் கிடைத்தது.
